6,7,8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்.!!
sengottaiyan press meet on feb 11
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய சூழ்நிலையில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தற்போது 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
sengottaiyan press meet on feb 11