இதை செய்தால்., இது கிடைக்கும்!! செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!
sengottaiyan new announcement
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அருகே உள்ள வி.கே. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், கலையரங்கம் கட்டுவதற்கானப் பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய பின்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளையும் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மரக்கன்று நடும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய அனைவருக்கும் பணி வழங்க முடியாது எனவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
English Summary
sengottaiyan new announcement