அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம்!! தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளி!!
puducherry special government school
புதுச்சேரி மடுகரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரமான வகுப்பறை அமைக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,பாதுகாப்பான வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிக்கு நிகராக உள்ள இந்த பள்ளியில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளித்த சிறப்பான பயிற்சியின் காரணமாக, இங்கு படித்த மாணவர்களுள் 22 பேர் மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளியான நவோதயாவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வி தரத்தை பார்த்து அசந்து போன பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க போட்டி போட்டு வரும் நிலையில், அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
English Summary
puducherry special government school