தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு.. வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகிறது. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவனுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், வகுப்பறைகளை தயார் செய்தல், தயார் செய்தல், கற்றல்-கற்பித்தல் பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு இன்று முதல் வருகை புரிந்துள்ளனர். விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next month may be school open in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->