தமிழகத்தில் 83,800 பேருக்கு புதிய வேலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!
new eighty thousand jobs created in tamilnadu
இந்தாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும்,83,800 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 9 தொழில் நிறுவனங்களுடன், ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 9 பெரும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதற்கு முன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்கள், 28.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் முதல்வர், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் கையெழுத்தாகின.
மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய லோகாவையும், தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற புதிய இணையதளத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மேலும் டி.ஆர்.டி.ஓ மற்றும் சென்னை ஐ.ஐ.டி இடையே தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கமும் கையழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பல காரணங்களால் கடந்த காலங்களில் தொழிசாலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல் சென்ற நிறுவனங்கள் கூட தற்போது மீண்டும் தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பார்த்து மீண்டும் தமிழகத்தில் தொழிலை தொடர்த்து நடத்த முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாட்டில் வசித்து தமிழர்கள் இங்கு தொழில் தொடங்க விரும்பினால் அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
English Summary
new eighty thousand jobs created in tamilnadu