10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் புதிய திட்டம்!
minister sengottaiyan says job
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. படித்து வேலைக்கு செல்லாமல் இளைஞர்கள் தற்போது கிடைத்த வேலையை குடும்ப கஷ்டத்தின் காரணமாக செய்துவருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டத்தால் பட்டதாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தால் கூட சென்று விடலாம் என்ற மனநிலைக்கு பட்டதாரிகள் மாறிவிட்டனர். தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழத்தில் ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் தொழில் மற்றும் திட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.
English Summary
minister sengottaiyan says job