சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!
jailer recuirment announced
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு இருக்கின்றது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது..
பணி: சிறைக் காவலர் - 01
தகுதி: குற்றவியல் நீதி நிர்வாகம், குற்றவியல் துறை, சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,900 - ரூ.1,16,600
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, உடற்திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019
எழுத்துத் தேர்வு நாட்கள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள்: முதல் தாள் 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. இரண்டாம் தாள் 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு http://www.tnpsc.gov.in/latest-notification.html என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.
English Summary
jailer recuirment announced