தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீட்டிப்பு.!!
holiday extensions to tn colleges
இந்தியாவில் கொரோனா வைரஸ் இதுவரை 1397 பேரை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது. ஊரடங்கால் ஏப்ரல் 14-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
holiday extensions to tn colleges