புதிதாக பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அனைவரும் "ஆல் பாஸ்" .. அமைச்சர் அறிவிப்பு!
5 and 8 public exam all pass
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி நிலையில், தமிழகத்தின் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்நிலையை பொதுத் தேர்வு தொடர்பாக செய்தியாளருக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்றாண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்.
மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வு தயாராகவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். இந்த பொது தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
English Summary
5 and 8 public exam all pass