#Breaking : 22 பொறியியல் கல்லூரிகள் மூடல்.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு.!
22 engineering colleges closes
இந்தக் கல்வியாண்டில் (2018-19) தமிழகத்தில் முதல் கட்டமாக 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50 சதவீதம் வரை குறைந்ததால், அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும், பி.இ. இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். அடிப்படை வசதி இல்லாத தகுதியான ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், 300 பாடப்பிரிவுகளில் 15 ஆயிரம் இடங்கள் குறைப்பட்டுள்ளது.இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கை 510 இல் இருந்து 488 ஆகக் குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.
English Summary
22 engineering colleges closes