கள்ளக்காதலில் ஈடுபட்டால் கருட புராணத்தின் படி என்ன தண்டனை தெரியுமா?.! தப்பி தவறியும் அனுபவித்து விடாதீர்கள்.!!
what is the destination of illegal affair by garuda puranam
இந்து மதத்தின் கூற்றுகள் படி நாம் வாழும் உடலுக்கு மட்டுமே இறப்பு.. நமது ஆன்மாவிற்கு இறப்பு என்பது கிடையாது. கடவுளால் படைக்கப்பட்ட உலகின் எதோ ஒரு மூலையில் நாம் பிறந்து கொண்டு தான் இருப்போம். அந்த வகையில்., நாம் பிறந்திருக்கும் சமயத்தில் நமது வாழ்க்கையின் போது நாம் செய்யும் பாவ - புண்ணிய கணக்கிற்கு ஏற்றார் போல நமது ஆன்மாக்கள் மேலுலகிற்கு சென்ற பின்னர் சொர்க்க - நரகத்தை அடையும்..
அவ்வாறு புன்னியம் செய்த ஆன்மாக்கள் சொர்கத்திலும்., பாவம் செய்த ஆத்மாக்கள் நரகத்தில் பல சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே... நமது முன்னோர்களின் கூற்றுப்படி நாம் செய்த பாவ - புண்ணியத்திற்கு ஏற்றார் போல நரகத்தில் வழங்கப்படும் தண்டனைக்கு பெயரும் - விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவை குறித்து இனி காண்போம்.
அநீத்தாமிஸ்ர நகரம்:
செய்திருக்க வேண்டிய குற்றம் - மனைவி - கணவன் சேர்த்து வாழாமல் இருவரும் ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல்..
வழங்கப்படும் தண்டனை - கண்கள் பறிக்கப்பட்டு இருளான இடத்தில் விடப்படுவது.
ரௌரவ நரகம்:
செய்ய வேண்டிய குற்றம் - பிறரின் குடும்பத்திற்கு கேடு நினைத்தல் அல்லது பிற குடும்பத்தின் பொருளை அபகரித்தல்.
வழங்கப்படும் தண்டனை - சூலாயுதத்தால் குத்தி துன்புறுத்தல் செய்வது.
Tamil online news Today News in Tamil
மகா ரௌரவ நரகம்:
செய்ய வேண்டிய குற்றம் - கொடூரமான முறையில் பிற குடும்பத்தை வதைப்பது., பிரிப்பது மற்றும் கேடுகெட்ட எண்ணத்தில் செய்யப்படுவது.
வழங்கப்படும் தண்டனை - "குரு" என்ற கொடூர மிருகங்களை விட்டு வதைப்பது..
கும்பிபாகம்:
செய்ய வேண்டிய குற்றம் - தனது வயிற்றை நிரப்ப வாயில்லா உயிரை வதைத்தல் மற்றும் கொடுமை செய்தல்.
வழங்கப்படும் தண்டனை - எரியும் எண்ணெய் கொப்பரையில் இட்டு வதைப்பது.
தாமிஸிர நரகம்:
செய்திருக்க வேண்டிய குற்றம் - பிறரின் மனைவியின் மீது ஆசைப்படுத்தல் அல்லது மோகம் கொண்டு செயல்படுதல்..
வழங்கப்படும் தண்டனை - முற்களால் ஆன கட்டைகள் கொண்டு அடித்து துன்புறுத்தல்.
காலகுத்திரம்:
செய்ய வேண்டிய குற்றம் - பெரியோர் மற்றும் பெற்றோரை அடித்தல்., அவமதித்தல் மற்றும் பட்டினி போடுதல்.
வழங்கப்படும் தண்டனை - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பழமொழிதான் இங்கு தண்டனையே.. உங்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டும் என்றால்... நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்..
இது குறித்த அடுத்த தகவலை அடுத்த பதிவில் காணலாம்...
Tamil online news Today News in Tamil
English Summary
what is the destination of illegal affair by garuda puranam