ஆஞ்சநேயரின் சிறப்புகள் என்ன? ஆஞ்சநேயரை எப்படி வணங்கலாம்?!
God Anjineyar Wish
சிவபெருமானின் அம்சமே ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் என்னும் அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தவர். இராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர்.
அதில் விஷ்னு ராமனாகவும், லட்சுமி சீதாவாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் அனுமனாக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபாடும் போது அது சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
ஆஞ்சநேயரை எப்படி வணங்கலாம்?
ராமநாமத்தால் ஜெபிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். பகைவரை பயமுறுத்தும் வலிமையும், மனஉறுதியும் கிடைக்கும்.