கடலூருக்கு வந்த யோகிபாபுவுக்கு நேர்ந்த அனுபவம்.! தெறித்து ஓடிய சம்பவம்.!
Yogi babu escape from cuddalore
கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். முதலில் யோகிபாபுவை பலரும் கவனிக்கவில்லை.
எனவே, அவர் பொதுமக்களோடு நின்று கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட்டு இருக்கின்றார். பின்னர், பாடலீஸ்வரர் விநாயகரை தரிசனம் செய்து இருக்கின்றார். தொடர்ந்து, பல்வேறு சந்நிதிகளுக்கு சென்று அவர் வழிபட்டு இருக்கின்றார்.
பின்னர், கோவிலை விட்டு வெளியே வந்தபோது அவரை அங்கு கடை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என்று அனைவரும் அடையாளம் கண்டு அவருடன் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
அவர் கோவிலுக்கு வந்த செய்தி சற்று நேரத்தில் காட்டுத் தீ போல பரவியதை தொடர்ந்து, அவரை காண பலரும் கோவிலுக்குள் முண்டியடித்து வரத் துவங்கினர். இதைக் கண்ட யோகி பாபு அவசர அவசரமாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
English Summary
Yogi babu escape from cuddalore