நயன்தாரா திருமணத்தில் அவரது தாய் கலந்து கொள்ளாமல் போனதற்கு இதுதான் காரணமா.?!
Why nayanthara mother Did Not Come to marriage
நடிகை நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் மூலம் அவருக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு வந்துவிட்டார்.
விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு அறிமுகமாகி சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு 200க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் அழைத்து இருந்தனர்.
இந்த திருமணத்தில் விக்னேஷ் சிவனின் பெரியம்மா, பெரியப்பாவை அழைக்கவில்லை என்று அவர்கள் சமீபத்தில் குறைபட்டுக்கொண்டிருந்தனர். இதில் நயன்தாராவின் தாயும் கலந்துகொள்ளவில்லை இதற்கு காரணம் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது தானாம்.
இதனைத் தொடர்ந்து, திருமணம் முடிந்த உடனே தனது தாயை பார்க்க நயன்தாரா சென்றுவிட்டு, அவருடன் மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கிவிட்டு வருவார் என்று கூறப்படுகிறது.
English Summary
Why nayanthara mother Did Not Come to marriage