பணத்திற்காக திருமணத்தில் திடீர் மாற்றம் செய்தாரா நயன்தாரா.?!வெளியான அதிர்ச்சி தகவல்.!
Why nayanthara change the marriage place
கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இவருக்கும், இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான திருமண அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற தேவஸ்தானம் எதற்காக மறுப்பு தெரிவித்தது? என்பது குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருடைய குடும்பத்தினரும் மொத்தமாக 150 பேர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.நட்சத்திரங்களின் திருமணம் என்ற காரணத்தால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதியில் ஏற்கனவே பக்தர்களின் வரவு அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு கேள்விக்குறி என்பதால் இந்த திருமணத்துக்கு திருப்பதி கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நயன் - விக்கி திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்க இருப்பதால், அவர்கள் இந்த திருமண நிகழ்வை மிகவும் கலர்ஃபுல்லாக காண்பிக்க திட்டமிட்டுள்ளனர்.இதனை கருத்தில் கொண்டுதான் மகாபலிபுரத்தில் நயன்தாராவின் திருமணம் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Why nayanthara change the marriage place