'ரஜினி -கமல்' உங்களுக்கு எதுக்கு அரசியல்.,பிரபல நடிகர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாதுறையில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவரது 151-வது படமான ”சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் போன்ற நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்தப் படத்திற்கான புரொமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதன்படி சிரஞ்சீவி சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்க்காணலில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுந்தது.

அதற்கு சிரஞ்சீவி அளித்த பதிலில், “அரசியல் என்பது இப்போது பணத்தை மையப்படுத்தியதாக மாறியுள்ளது. நல்லது செய்ய அரசியலில் நுழைந்தாலும், இப்போது நம்மால் அதைச் செய்ய முடியாது. 

எனக்கு கிடைத்த நம்பர் 1 இடத்தை விட்டு நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் எனது சொந்தத் தொகுதியிலேயே, என்னைத் தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள். அதேபோல் தான் என் சகோதரர் பவனுக்கும் நடக்கிறது” என்றார்.

மேலும் தொடர்ந்த சிரஞ்சீவி, “கமல் இந்த முறை வெல்வார் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், பொறுமையுடன் இழப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளலாம், ஆனால் என்னைப் போன்ற சென்சிடிவ் தன்மை கொண்டவர்களால் அரசியலில் இருக்க முடியாது. 

கமலும், ரஜினியும் என்னைப் போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களிடம் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல. இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால், அரசியலுக்கு வாருங்கள், ஒரு நாள் விஷயங்கள் மாறக்கூடும்” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Kamal Rajini Enter In Politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->