வெகு நாட்களுக்குப் பிறகு நடிகை சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்தது குறித்து பேசிய விசுவாச பட வில்லன்!!
Viswasam movie villain about actress Soundarya
தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அக்கட்சியில் இணைந்தார். பின்னர் விமான விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவர் நடிகையாக தெலுங்கு படத்தில் நடித்தபோது ஜகபதி பாபு உடன் இணைந்து ஒரு படம் நடித்தார். அந்தப் படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவே இருவரையும் வைத்து பல வதந்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து வெகுநாட்களுக்குப் பிறகு தற்போது ஜகபதி பாபு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சௌந்தர்யாவும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்கள் அனைத்தும் உண்மையே ஆனால் அது எங்களுக்கிடையே நல்ல தொடர்பு, நட்பு ரீதியான தொடர்பு என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் நான் ஒரு நடிகை சவுந்தர்யாவின் அண்ணனும் நல்ல நெருங்கிய நண்பர்கள். எனவே இருவரும் அடிக்கடி வீடுகளில் சந்தித்து பேசிக் கொள்வோம் அப்படித்தான் எனக்கும் சௌந்தர்யாகாண நட்பும் என்று கூறியுள்ளார்.
English Summary
Viswasam movie villain about actress Soundarya