கிறிஸ்தவ முறைப்படி நயன்தாரா திருமணமா.? விக்னேஷ் சிவன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான திருமண அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போடப்பட்டுள்ளது.

திருமணத்தை முடித்த பின்பு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்து இருக்கின்றனர். இந்த நிலையில், நடிகை நயன்தாரா கிறிஸ்துவர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்து என்பதால், இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடக்க உள்ளதா? அல்லது கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளதா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே நீடித்து வந்தது.

அத்துடன் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவர் இந்து முறைப்படி தான் திருமணம் நடைபெறும் என்றும், திருமணம் முடிந்ததும் அன்று மதியமே தங்களது திருமண புகைப்படத்தை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜூன் 11ஆம் தேதி விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் சேர்ந்து வந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viknesh shivan and Nayanthara marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->