நயன்தாராவை இழிவாக பேசிய ராதாரவி!! பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன்!. - Seithipunal
Seithipunal


நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவருமான ராதாரவி கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வைத்திருப்பார்கள், பின்னர் மறந்துடுவாங்க.

 
முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் போலவும் இருக்கிறார்கள். கூப்பிடும் போலவும் இருக்கிறார்கள் என் அருவெறுப்பாக பேசியுள்ளார். அவரது பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



 

இந்நிலையில், இதுகுறித்து நயன்தாராவுடன் தற்போது நெருக்கமாக இருந்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சினிமா பிரபல குடும்பத்திலிருந்து வந்தவர், அறிவில்லாமல் தனது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு தரக்குறைவாக பேசுவதை இங்கு யாரும் கண்டிக்க மாட்டார்கள். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. இந்த அறுவறுப்பான பேச்சுகளுக்கு ரசிகர்கள் கைதட்டி பாராட்டுவதை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan angry on Radharavi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->