நயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கையோடு விக்னேஷ் சிவன் செய்த காரியம்..!!
vignesh shivan insta post on sabarimalai
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்களும் தங்களுடைய பங்குக்கு இணையத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு, காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதுபோலவே நேற்று நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தினத்தினை பரிமாறிக் கொண்டு இருக்கின்றனர்.
சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக நடிகை நயன்தாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் க்யூட் லவ் ஸ்டோரி என்று தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அதுபோலவே இயக்குனர் விக்னேஷ் சிவனும், 'நாங்கள் காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்படி போனது என்றே தெரியவில்லை. அழகான ஞாபகங்கள் பல இருக்கின்றன. உன்னுடைய அன்பினால் ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினம் தான் என்று பதிவிட்டு இருக்கின்றார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் காதலர் தினத்தை முடித்த கையோடு அடுத்த நாள் இவர் மாலை போட்டுக்கொண்டு சபரி மலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். இதற்கு தற்போது "இவர் இயக்கவிற்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக தான் தரிசனம் செய்ய வந்துள்ளதாக" பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
English Summary
vignesh shivan insta post on sabarimalai