வடசென்னை 2 படம் குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட தகவல்.!- வெறியான ரசிகர்கள்.!
vetrimaran speech about vadachennai 2 update
கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
வடசென்னை முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் இது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் பங்கேற்கும் போது வடசென்னை இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை இரண்டாம் பாகம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவர் பேசுவதற்காக மேடையில் ஏறிய பொழுது ரசிகர்கள் அவரிடம் சத்தம்போட்டு வடசென்னை 2 எப்பொழுது என்று கேள்வி எழுப்பினர்.
"அதற்கு அவர் வட சென்னை இரண்டாம் பாகம் உருவாக்குவது மிக எளிதான காரியம் இல்லை. படம் நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால், இந்த படத்தை காண ரசிகர்கள் மூன்று வருடங்களாவது கட்டாயம் காத்திருக்க வேண்டும்." என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
படம் வருகிறதோ இல்லையோ? ஆனால், வெற்றிமாறன் கொடுத்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் வெறிபிடிக்க செய்துள்ளது.
English Summary
vetrimaran speech about vadachennai 2 update