வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே அதிமுக முன்னிலை!! பின் வாங்கிய திமுக!!
vellore first round vote counting
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் பொருளாளரும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், சுயட்சே உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேலூர் மக்களவை தொகுதியில் பொறுத்தவரையில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சம் பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரம் பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.
இந்தநிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பபட்டன.
இதையடுத்து, வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. முதலில் தபால் ஒட்டு எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 .45 நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 21,660 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 21,177 வாக்குகளும், நாம் தமிழர் 400 வாக்குகள் பெற்றுள்ளனர். 5 தொகுதிகளின் முதல் சுற்று வாக்கு வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 483 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
English Summary
vellore first round vote counting