பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள இது தான் காரணமா.?! மனம் திறந்த வனிதா.!
vanitha open talk about peter paul
நடிகை வனிதா விஜயகுமார் தளபதி விஜய்யுடன் நடித்த சந்திரலேகா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹிட்லர் பிரதர்ஸ், தேவி போன்ற படங்களில் அவர் நடித்திருப்பார்.
வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். தற்பொழுது வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்து நிர்வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆன வனிதாவுக்கு தற்போது பீட்டர் பால் என்பவரோடு மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகின்றது. தனது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் வனிதா மனம் திறந்துள்ளார்.
அதில், "முதன்முறையாக பீட்டர் பாலை கடந்த டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். அவர் ஒரு வி.எஃப்.எக்ஸ் டெக்னிஷியன். இயக்குநர் ஆகும் ஐடியாவில் இருந்தார். அப்பொழுது தான் நான் பீட்டரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அவருடைய படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் வைத்திருப்பதாக தெரிவித்தார். இருவருக்கும் ஒரே மாதிரியான ஈடுபாடு தொழிலில் இருந்தது தான் என்னை இம்பிரஸ் செய்தது.
அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஒருவரைப் பற்றி ஒருவர் நிறைய தெரிந்து கொண்டோம். பீட்டர் பால் மிகவும் அக்கறையானவர், உண்மையானவர், அர்ப்பணிப்பு குணம் கொண்டவர். " என்று வனிதா தனது எதிர்கால கணவர் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
English Summary
vanitha open talk about peter paul