காவல் நிலையத்தில் வனிதா.! புதுப்புது பிரச்சனைகளால் சர்ச்சைக்குள்ளாகும் வனிதா வாழ்க்கை.!
Vanitha complaints about Surya devi
கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை விட வெகு சீக்கிரமாக வைரலாவது வனிதாவின் புதிய திருமணம் குறித்த செய்திகள்தான். சமீபத்தில் அவர் இயக்குனர் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட பின்னர், தமிழகத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய டாப்பிக்காக மாறிவிட்டார்.
பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் அளித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் சில திரையுலக நட்சத்திரங்களும் இந்த திருமணத்தை கண்டித்து வீடியோ வெளியிட துவங்கியுள்ளனர்.
குறிப்பாக சூரியா தேவி என்ற பெண் நடிகை வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதாவும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், எலிசபெத் மற்றும் சூரிய தேவி இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது அந்த வீடியோ தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. வனிதாவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில், நடிகை வனிதா தன்னை பற்றி சூர்யா தேவி அவதூறு பரப்புவதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, சூர்யாதேவி தெலுங்கானா கவர்னர் தமிழிசை குறித்து அவதூறு பேசியதால் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vanitha complaints about Surya devi