தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் உளறல்!! முன்னிலையில் வந்த கவர்ச்சி புயல் சன்னி லியோன்!! ஆர்வத்துடன் வெளியிட்ட பதிவு!!
Tv anchor wrongly said about sunny leone
ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். இவர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடத்து வருகிறார். இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்துவரும் நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சன்னி லியோன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி அதன் முடிவுகள், அனைத்து தொலைக்காட்சியிலும் நேரலையாக அறிவிக்கப்பட்டு கொண்டிருந்தது.
இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில், அர்னாப் என்ற தொகுப்பாளர், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் என்பதற்கு பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகை சன்னி லியோன்தனது ட்விட்டர் பக்கத்தில் நான் எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன் என கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்களும் தொகுப்பாளரை கேலி செய்து பதிவிட்டுவருகின்றனர்.
English Summary
Tv anchor wrongly said about sunny leone