கஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.! அதிர்ச்சியில் உறைந்து போன கஸ்தூரி.!  - Seithipunal
Seithipunal


தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து முதலில் பாத்திமா வெளியேறினார். அவரை தொடர்ந்து வனிதா, மோகன் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறி நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீடு களை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீடு மிகவும் சாந்தமாகவே சென்றது. காண்போருக்கு பிக் பாஸ் வீட்டில் போரடிக்கும் என்பதனால் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி விட வனிதாவை உள்ளே அனுப்பினர்.

அவர்கள் நினைத்தது போலவே வனிதா உள்ளே சென்றதிலிருந்து பிக்பாஸ் வீடு அல்லல்பட்டு வருகின்றது. நடந்த பல்வேறு சம்பவங்களின் தொடர்ச்சியாக மதுமிதா தற்கொலை முயற்சி செய்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றைக்கான promo தற்போது வெளியாகி இருக்கின்றது. இதில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் பள்ளி மாணவ மாணவிகள் போல உடை அணிந்து கிளாஸ் ரூம் இல் இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர். 

இதில் கஸ்தூரி டீச்சராக இருக்கின்றார். அப்பொழுது வனிதா சேரனிடம்,"மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தண்டிப்பது போல, ஆசிரியர் தவறு செய்தால் மாணவர்கள் தண்டிக்க வேண்டும் என குழந்தையைப் போல முகத்தை வைத்துக்கொண்டு கொடூரமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்த்த கஸ்தூரி ஸ்தம்பித்துப் போய் நின்றார். சேரனும் பதில் கூற முடியாமல் திருதிருவென விழுகின்றார். இன்றய நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய ப்ரோமோ வீடியோ:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today biggboss promo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->