கணவரை ஊக்கப்படுத்திய நித்யா! அதிரடியாக எடுத்த முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக தாடி பாலாஜிக்கும், நித்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனை தொடர்ந்து இருவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இருவரும் சமாதானமானார்கள். 

அதனைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் நித்யா போலீசாரிடம் மீண்டும் கணவர் தாடி பாலாஜி மதுபோதையில் தனது இல்லத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியதாகவும், செல்போனில் ஆபாசமாக திட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்பொழுது நித்யா அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார்.  மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் அவர்  ஒப்பந்தமாகியுள்ளார்.

 இந்நிலையில் இது குறித்து நித்யா கூறுகையில், நான் சினிமாவில் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தமாகி தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கையை போலவே அமைந்துள்ளது. அதாவது கணவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரம் அது.

 பாலாஜி சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த காலத்தில் நான் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை வழி நடத்தினேன். அப்பொழுதெல்லாம் பாலாஜி மனமுடைந்து விரக்தியாக பேசும்பொழுது, நான்தான் கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் என அவனை ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.

சிறிது காலத்திலேயே எல்லாம் நடந்தது. ஆனால் அதன் பிறகு எல்லாம் வேறு மாதிரி மாறிவிட்டது. நான் தற்பொழுது நடிக்கும் கதாபாத்திரம் எனது வாழ்க்கையை பழைய வாழ்க்கையை நியாயப்படுத்துவது போன்று உள்ளது என நித்யா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thaadi balaji wife nithya act in movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->