என் வாழ்க்கையை கெடுத்த அவரை... விசாரணைக்கு பிறகு ஆவேசமான தாடி பாலாஜியின் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக தாடி பாலாஜிக்கும், நித்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

 அதனை தொடர்ந்து இருவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் போட்டியாளர்களின் அறிவுரையின்படி சமாதானமானர்.
மேலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் நித்யா போலீசாரிடம் மீண்டும் கணவர் தாடி பாலாஜி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தாடி பாலாஜி மதுபோதையில் தனது இல்லத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியதாகவும், செல்போனில் ஆபாசமாக திட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 
போலீஸ் கமிஷனர் எனக்கும் எனது மனைவி நித்யாவுக்கும் இடையேயுள்ள  பிரச்சினை குறித்து விசாரணை செய்வதற்காக என்னை  அழைத்தார். 

மேலும் எனது குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் தற்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.ஆனால் அவர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை போதாது. எனவே அவர் இனி எந்த குடும்பத்தையும் கெடுக்காத அளவுக்கு அவர் மீது  இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மனைவியுடன் உள்ள பிரச்சினையை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வேன். எனது மகளை நன்றாக படிக்க வைக்க உதவி செய்வேன் இனியன கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும். நான் உழைத்து சம்பாதித்து 40 லட்சம் செலவழித்து கட்டிய வீட்டை நானே எப்படி செய்த படுத்துவேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thaadi balaji talk about nithya problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->