#Breaking: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது.! ஓட்டல் ரெய்டில் சிக்கிய நடிகை.!  - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ஜூன் மாதத்தில் பிரபல இந்தி நடிகர் பிரசாந்த் சிங் ராஜ்புத் தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகிலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இவர் தற்கொலை சம்பவத்திற்கு போதைபொருள் நடமாட்டம் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. சினிமா விருந்துகளில் நடிகை நடிகர்கள் போதைபொருள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து காதலியான ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். 

தொடர்ந்து நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான் ஆகியோர் இந்த வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டனர். இந்நிலையில், தெலுங்கு நடிகையான ஸ்வேதா குமாரி தற்போது போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கின்றார். 

மும்பை காவல்துறை நட்சத்திர விடுதி ஒன்றில் சோதனை நடத்தியபோது நடிகை ஸ்வேதா குமாரி சிக்கியிருக்கிறார். அங்கு நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை கைதாகி இருப்பது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telugu actress arrested


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->