கோடி ரூபா கொடுத்தாலும், இதை மட்டும் செய்யவே மாட்டேன்- அடம்பிடிக்கும் பிரபல நடிகை.!
Tamil Actress says about face cream
நடிகர் ஜெய் நடித்து வெளியான "வாமணன்" என்ற திரைப்படத்தின் மூலமாக பிரியா ஆனந்த் நடிகையாக பிரபலமானவர். அதன் பின்னர் இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, என பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான ஆதித்ய வர்மா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு திரை படங்களில் நடித்து இருக்கின்றார். தற்போது இந்த நடிகையின் வணக்கம் சென்னை பார்ட் - 2வாக உருவாகி வருகின்றது. சுமோ திரைப்படத்தில் மீண்டும் பிரியா ஆனந்த் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், தற்பொழுது இந்த நடிகை எவ்வளவு கோடி கோடியாய் கொட்டி பணம் கொடுத்தாலும் நான் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் தென்னிந்திய பெண்களின் டஸ்கி கலர் மற்றும் அவர்கள் கண்ணில் இருக்கும் ஸ்பார்க் வேறு எங்குமே இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே அவர் வெள்ளையாக இருக்கும் பிற மாநில பெண்களை கூட்டி வந்து, அந்த பெண்களின் நிறத்தை குறைத்து மேக்கப் பொட்டு அதன் பின்னர், இந்த க்ரீம் போட்டால் தான் அவர்கள் வெள்ளையாக முடியும் என்று கூறுவது சற்றும் நியாயமில்லை." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Actress says about face cream