டி.ராஜேந்திரன் பூரண குணமடைந்தார்.. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகரும் இயக்குனருமாக தமிழ் சினிமாவில் வலம் வரும் டி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.

அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு இருப்பதாகவும், மேல் சிகிச்சை தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவருக்கு வெளிநாடு சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிம்பு முடிவெடுத்தார். 

அதன் பின்னர், சிம்புவின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு சென்று பின்னர் லண்டனில் டி ராஜேந்தர் சிகிச்சை முடித்து அவர் பூரண குணமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் இருக்கும் வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வு எடுத்துவிட்டு பின்னர், அவர் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது, சிம்பு, டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையின் சிகிச்சை முடிந்தவுடன் சிம்பு பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T Rajenthiran Health Condition now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->