சுஷாந்திற்கு வேண்டும் என்றே போதைப்பொருள் கொடுத்த ரியா?.. விசாரணை அதிகாரி பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிரபல இந்தி திரையுலக நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கு பின்னர் அவரது மரணம் தொடர்பாகவும், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தது. 

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது தம்பி சோவிக், சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். 

ரியா மீதான விசாரணைக்கு பின்னர், போதைப்பொருள் தடுப்பு அதிகாரியொருவர் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், " போதைப்பொருள் கும்பலை சார்ந்த பாரிக்கர் மற்றும் காசினான் இப்ராகிம் ஆகியோரிடம் இருந்து சோவிக் போதைப்பொருளை பெற்று, ரியாவிடம் முதலில் வழங்கியுள்ளார். 

இதன்பின்னர் சுஷாந்திற்கு போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று சாமுவேல் மற்றும் திபேஷ் கஞ்சாவை சிகிரெட்டில் நிரப்பி சுஷாந்திற்கு வழங்கியுள்ளனர் " என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் சுஷாந்த் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sushant Singh Rajput Suicide case Riya gives Drug to Sushant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->