ஜெய்பீம் சர்ச்சைகள் குறித்து.. சூர்யா கூறிய விஷயம்.! மாற்றத்திற்கு தயாராகுங்கள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், வினய், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் சமீபகாலமாக வெளியாகி வருகின்றன. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது. 

இத்தகைய நிலையில் இந்த திரைப்படத்தில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பேசியபோது," எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் யாரும் பேச துணியாத ஒரு விஷயத்தை பேசியுள்ளோம். ஜெய்பீம் படத்தில் சிலருக்கு சங்கடங்கள் ஏற்பட்டது. அதை சரி செய்யும் முயற்சியும் படக்குழு சார்பில் எடுக்கப்பட்டது.

அப்பொழுது எனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. நாம் எப்பொழுதும் இழப்பதற்கு தயாராக இருந்தால்தான் நமக்கு அடைவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். எனவே மாற்றத்திற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள்." என்று சூர்யா தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya speech In ET movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->