மீண்டும் இவருடனா?! மிரளவைக்கும் டைட்டில், சூர்யாவின் அடுத்த படம் அறிவிப்பு!
surya 39 th movie update
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது சூரரை போற்று என்ற திரைப்படத்தில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உருவானது.
இப்படத்திற்கு பிறகு சூர்யா ஹரி இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 39ஆவது படத்தை ஹரி தான் இயக்க போகிறார். இப்படத்திற்கு 'அருவா' என தலைப்பு வைத்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தை சூர்யாவின் உறவுக்காரர் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ளது. டி.இமான் இசையமைக்க உள்ளார் என்பதுதான் தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்.
இந்த படம் சூர்யாவிற்கு இயக்குனர் ஹரி அவர்களுக்கு 6ஆம் முறையாக இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருடனும் டி.இமான் முதன்முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.