அனத்தாம இருங்கப்பா.. மாநாடு வசூல் 100 கோடிலாம் இல்ல- சுரேஷ் காமாட்சி விளக்கம்.!
Suresh kamatchi shared about manadu
சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பு இதனை மௌனமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் இது உண்மை இல்லை என்று சுரேஷ் காமாட்சி தனது நண்பர்களிடம் கூறினார். நெட்டிசன்கள் எதையாவது கிளப்பி விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அதையெல்லாம் நம்பாதிங்க என்று சுரேஷ் காமாட்சி நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
English Summary
Suresh kamatchi shared about manadu