தடைவிதிக்கப்பட்ட கிரிக்கெட்டரை சந்தித்த விஜய் சேதுபதி.! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட கிரிக்கெட் வீரர்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமாக செயல்படுகின்ற வீரர்களில் ஸ்ரீசாந்த் முக்கியமானவராக இருந்தார். இவர் 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பைக்காக போராடிய இந்திய அணியின் தொடர்களில் இடம்பெற்றிருந்தார். 

ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், நிறைய போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விளையாட அனுமதி வாங்கினார். வரும் செப்டம்பர் மாதத்துடன் அவரது தண்டனை காலம் முடிகிறது. 

அனால், இந்திய அணியில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தற்போது அவர் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சன்னி லியோனுடன் இணைந்து அவர் ஒரு முக்கிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. 

இந்த படத்திற்கு பட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு த்ரில்லர் படம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீசாந்த் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். 

இத்தகைய சூழலில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை ஸ்ரீசாந்த் சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், "உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srisanth post about vijay sethupadhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->