முகநூல் காதலுக்காக இலங்கையில் இருந்து பறந்து வந்த காதலி.! பின் நடந்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


சேலத்தின் ஓமலூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு முகநூல் மூலமாக இலங்கை பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நிஷாந்தினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

சரவணன் மட்டும் நிஷாந்தினி இருவருமே கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நிஷாந்தினி சுற்றுலா விசா மூலமாக சேலம் வந்தடைந்த நிலையில், அங்கு இருக்கும் ஒரு கோவிலில் இருவரும் திருமணமும் செய்தனர்.

இதனை பதிவு செய்துகொள்ள முடிவெடுத்து அரசு அலுவலகத்தை நாடியுள்ளனர். நிஷாந்தினி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறி தடையில்லா சான்று வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக அந்த காதல் ஜோடி செய்வதறியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். நிஷாந்தினியின் விசா காலமும் சீக்கிரமாக முடிவடைய இருப்பதால் அந்த காதல் ஜோடி மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan women marry indian women


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->