மதுரைனா மல்லியோ, மீனாட்சியோ இல்ல., இனி சூரி தான்.! எட்ட முடியாத உயரத்தில் சூரி.!  - Seithipunal
Seithipunal


மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மல்லியும், மீனாட்சி அம்மனும் தான், ஆனால், நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலருக்கும் மதுரை ஞாபகத்திற்கு வரலாம். மதுரையில் நிறைய ஹோட்டல்கள் இருந்தாலும் கூட கூட்டம் அதிகம் வரும் ஓட்டல் என்றால் அது சூரியின் அய்யன்-அம்மன் ஹோட்டல் தான். 

சூரி மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்த ஓட்டலை ஆரம்பித்தார். இதை நடிகர் சிவகார்த்திகேயன் சென்று திறந்து வைத்தார். இதுவரை அவர் 16 கிளைகள் திறந்துள்ளார். வெஜ் ஹோட்டல், நான் வெஜ் ஹோட்டல்கள் என்று தனித்தனியாக இருந்தாலும், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான சுவை இருப்பதால் குறைந்த நாட்களில் பெரிய வெற்றியை கொடுக்க முடிந்தது என்று சூரியின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 

படப்பிடிப்பு இல்லாத காலத்தில் சூரி ஓட்டலில் தான் இருப்பாராம். ஹோட்டல் இவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுக்க காரணம் மாஸ்டர்கள் தான் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று முன்பைப் போல ருசி இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. எனவே, அந்த ஓட்டல் போல சூரியின் ஓட்டலும் படுத்து விடக்கூடாது என்பதற்காக சூரியன் தாயார் பிரத்தியேகமாக உழைத்து வருகிறாராம். 

தற்போது, சூரியின் ஆசை உலகம் முழுக்க இந்த ஓட்டலை நின்றான் செய்ய ஆரம்பித்து குறைந்த விலையில், இதைவிட அதிக சுவையோடு உணவு கொடுக்க வேண்டும் என்பது தானாம். அடுத்த ஓட்டலை அவர் சென்னையில் திறக்கலாம் என்று அவரது நண்பர்களான சில நடிகர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sooris ayyan amman hotel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->