நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பொருள்..! போலீசார் விசாரணை.!  - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா (Papireddyguda) என்ற ஊரில் 40 ஏக்கர் விளை நிலத்தை நாகார்ஜூனா வாங்கினார். இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜூனாவின் மனைவியான நடிகை அமலா, அந்த விளைநிலத்தைச் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.

இயற்கை விவசாயம் செய்யும் பொருட்டு, மண்ணின் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அனுப்பி வைத்தார். அந்தக் குழுவானது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, துர்நாற்றம் வீசியுள்ளது.

விளைநிலத்தின் அருகே இருந்த பழைய பொருட்கள் அறையில் பார்த்த போது மனித எலும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் எலும்புக் கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கதாகக் கருதப்படும் நபர், 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். உயிரிழந்த நபர் குறித்தும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

skeleton taken from nagarjuna land


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->