சூர்யாவின் முக்கிய படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம்.! ஆச்சர்யப்படுத்திய தகவல்.!
Simbu missed edharkum Thunindhavan movie
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.
ஏற்கனவே, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது இந்த படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இத்தகைய நிலையில், தற்போது, இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதையே முதலில் நடிகர் சிம்புவுக்காக தான் எழுதப்பட்டது என்றும், ஆனால், சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்ட என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Simbu missed edharkum Thunindhavan movie