மாநாட்டுக்கு பின், சிம்பு எடுத்த முடிவால் ஆடிப்போன தயாரிப்பாளர்.!
Simbu increased salary
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, நடிகர் சிம்பு தனது சம்பளத்தை 20 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், தயாரிப்பாளர் ஒருவர் சிம்புவின் படத்தை தயாரிக்க விரும்பி சிம்புவிடம் கேட்டபோது சம்பளத்தை கேட்டு அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.