தனது பெற்றோர் குறித்து உருக்கமாக பேட்டியளித்த சிம்பு.!
Simbu about parents
சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரீ கொடுத்தார். முதல் படம் மிகவும் மொக்கையாக இருந்தாலும் அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்துள்ளார் என்று ஆணித்தனமாக அனைவருக்கும் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் யுவன் இசை மற்றும் வெங்கட்பிரபுவின் திறமை என்று கூறினால் அது மிகையாகாது. 100 கோடி வசூலை பெற்று மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் 10 தல படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியிருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. நடிகர் சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவருக்கும் இடையில் காதல் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இருவரும் லிவின் டூ கெதரில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு, "அடுத்த ஜென்மத்திலும் என் பெற்றோருக்கு மகனாக பிறக்க வேண்டும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.