எல்லாம் தலைகீழா மாறிடுச்சா.? ஷிவானி முதன் முதலாக இன்ஸ்ட்டா பக்கம் தலைகாட்டல்.!
shivani first instagram post
தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா போன்ற ஐந்து போட்டியாளர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் ஆரி அர்ஜுனன் அதிக வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆரிக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
16 போட்டியாளர்களின் ஒருவரான நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் தான் வெளியேறினார். பாலாஜியுடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பொது நிகழ்சியில் தாயிடம் வீங்கி கட்டிக்கொண்டார்.
இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது வெளியில் வந்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
shivani first instagram post