வடிவேலு மீது ஷங்கர் புகார்..! இந்த படமும் போச்சா ? - Seithipunal
Seithipunal


ஏற்கனவே சிம்புதேவன் வடிவேலுவை வைத்து தொடங்கிய 24ஆம் புலிகேசி படத்தில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு படத்தை விட்டு வடிவேலு வெளியேறினார். 

வடிவேலு திரும்பி வருவார் படத்தை தொடங்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த படக்குழுவினர் அவர் திரும்ப வர போவதில்லை என்று ரூ.6 கோடி செலவில் போடப்பட்ட செட் பிரிக்க பட்டு நஷ்டம் அடைந்தது .

இதன் காரணமாக தயாரிப்பாளர் ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். மேலும் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லை என்றால் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வடிவேலு நஷ்ட ஈடு வழங்கும் வரைக்கும் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று நடிகர் சங்க தரப்பில் அறிவித்துள்ளார். அதனால் தற்போது அவர் ஒப்பந்தமிட்ட வேறு படத்திலும் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையை அவர் எப்படி சமாளிப்பர் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மீம்ஸ் மூலம் சமூகவலைத்தளங்களை சுற்றி வரும் வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்க வருவார் என்று சந்தோஷத்தில் இருந்தனர் இந்த பிரச்னையில் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா வடிவேலு.?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shankar report on vadivelu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->