குடிசை வீட்டில் ரொம்ப கஷ்டப்பட்டோம், ஆனால்.. மனதை உருக வைத்த பிரபல சீரியல் நடிகை!
serial actress chitra interview
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சித்ரா. இவர் தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல தமிழ்பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் எனக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர். இந்நிலையில் நான் வயிற்றில் இருக்கும் போது, இன்னொரு குழந்தை வேண்டாம் என்று என் அம்மா மருந்தெல்லாம் சாப்பிட்டார்கள்.
ஆனால் அதை எல்லாம் எதிர்த்து தான் பிறேந்தேன். மேலும் என் பரம்பரையிலே முதல்முறையாக முதுகலைப் பட்டம் பெற்றவர் நான்தான்.என் வீட்டில் என்னை மீடியாவுக்கு அனுப்பமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாங்க, அதன் பின்னர் என்னுடைய முயற்சியால் மக்கள் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் முதலில் குடிசை வீட்டில் தான் இருந்தோம். இதைத் தொடர்ந்து அரசாங்கத்திலிருந்து குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு கட்டி கொடுத்தார்கள். ஆடு மிகவும் சிறிய வீடு.
சிறுவயதில் எனக்காக அம்மா, அப்பா ரெம்ப கஷ்டப்பட்டிருக்காங்க, அவங்களை உட்கார வைத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இரவு பகலாக ஓடி உழைத்தேன் இறுதியில் இப்போது வீடு கட்டியிருக்கிறேன். சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன்.
அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
English Summary
serial actress chitra interview