சரவணன் மீனாட்சி நடிகரும், திரைப்பட இயக்குனரின் மறைவுக்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த டிடிவி..!
saravanan meenakshi actor death
பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். மற்றும் இது ஒரு "பொன் மாலை பொழுது" என்ற பாடலில் தோன்றியிருக்கிறார்.
அதன்பிறகு தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக 'பாலைவன சோலை', 'சின்ன பூவே மெல்ல பேசு', 'பறவைகள் பலவிதம்' போன்ற படங்களை சேர்ந்து இயக்கினார்கள்.
அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய ராஜசேகர் தொடர்ந்து பல படங்களிலும் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். அதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த செய்தியை கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் '' வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் முத்திரை பதித்த நடிகரும், இயக்குனரும், கழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான திரு.ராஜசேகர் மறைந்தார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் '' என்று கூறியுள்ளார்.
English Summary
saravanan meenakshi actor death