'போடா போடி' படம் அப்போவே இதை செய்திருக்க வேண்டும் தப்பு பண்ணிட்டேன் - சரத்குமார்..!  - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில், வெளியான "போடா போடி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் ஆவார். முதல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் வரலக்ஷ்மி.

சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் வரலக்ஷ்மி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். பெரும் சர்ச்சைக்கு பிறகு வெளியான சர்க்கார் படத்திலும் இவர் முக்கிய வில்லலியாக நடித்து பெரும் புகழை பெற்றார்.

இதை தொடர்ந்து, தற்போது வரலக்ஷ்மி சரத்குமார், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்  ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து, சரத்குமார் பேசுகையில் வரலக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். "வரலக்ஷ்மி சரத்குமார் சிம்புவுக்கு ஜோடியாக போடா-போடி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சற்று தாமதமாக தான் வந்தது.

அந்த சமயத்தில் நான் மற்ற இயக்குனர்களிடம் பேசி வரலட்சுமிக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் இருந்ததற்கு நான் வருந்துகிறேன். அதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறேன்" என நடிகர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar says sorry to varalakshmi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->