காமெடி கதாநாயகனாக நடிப்பது., ரசிகர்களை மகிழ்விப்பதே எனது மகிழ்ச்சி.! மனம் திறந்த சந்தானம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முன்னணி மட்டும் காமெடிகளின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சந்தானம்., "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மூலமாக கதாநாயகனாக மாறினார். 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"., இங்க என்ன சொல்லுது"., "இனிமே இப்படிதான்'., "சக்கபோடு போடு ராஜா" மற்றும் "தில்லுக்கு துட்டு" படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில்., இதற்கு அடுத்தபடியாக "மன்னவன் வந்தானடி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய படங்கள் நடித்து திரைக்கு வராமல் இருக்கும் நிலையில்., இயக்குனர் ராம்பாலாவுடன் இணைந்து தில்லுக்கு துட்டு 2 ம் பாகத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்தானம் பேசியதாவது., பேயை பார்த்தால் மனிதர்கள் பயம் அடைவது வழக்கம்., தில்லுக்கு துட்டு பேய்கள் நிறைந்த காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை பார்ப்பவர்கள்., அந்த காலத்தில் நாகேஷ் மற்றும் சந்திரபாபு திரைப்படங்களை பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தும். இன்னும் கதாநாயகனாகவே காமடியிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருப்பேன். எனது படங்கள் பல இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

அதற்கு நான் காரணம் இல்லை., இந்த படம் எனது சொந்த திரைப்படம் என்பதால் குறித்த தேதியில் வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam talk about his current comedy and hero carrier in dhilluku dhuddu 2 movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->