கொரோனா உதவிக்காக களத்தில் குதித்த சந்தானம்.! ரசிகர்களுடன் இணைந்து செய்த செயல்..!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை மூலமாக அறிமுகமாகிய சந்தானம் பின் நடிகராகி இப்போது வெள்ளித்திரை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். சந்தானம் அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றார்.  

இந்நிலையில், சந்தானம் பேரிடர் நேரங்களில் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக நின்று உதவிகள் பல செய்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்து கொண்ட ஒன்று தான்.

தற்போது கொரோனா பாதிப்பினால் நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பலரும் உணவுக்கு திண்டாடி வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சந்தானம் தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார். அவரால் முடிந்தவரை பல ஆயிரங்கள் மற்றும் லட்சங்களை மக்கள் பணிக்கு கொடுத்து உதவி வருகிறார். 

இதனால், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் சனிடைசர், மாஸ்க் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இவரின் உதவியினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam helps to tn peoples who live without food


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->