தனது EX காதலன் குறித்து துயர செய்தியை வெளியிட்ட சமந்தா.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!
samantha speech about her ex lover
பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, விஜய், விக்ரம் என்று பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி திரைப்படங்கள் பலவற்றை கொடுத்துள்ளார்.
தெலுங்கிலும் நடிகை சமந்தா முன்னணியில் இருக்கிறார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தன்னுடைய சினிமா வாழ்வை பாதிக்காதவாறு நடிகை சமந்தா மேனேஜ் தான் செய்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு முன்பு ஒரு பிரபல நடிகர காதலித்து பிரிந்தது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கின்றார்.
அப்பொழுது நான், "இதற்கு முன்பு காதலித்தவரை திருமணம் செய்து இருந்தால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நானும் நடிகை சாவித்திரியை போல பெரும் பிரச்சனையை சந்தித்து இருப்பேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் முதலிலேயே சுதாரித்துக் கொண்டு பிரிந்து விட்டேன். நாக சைதன்யாவை போன்ற ஒரு நல்லவர் கணவராக கிடைக்க நான் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
நல்ல வேலையாக தப்பித்துவிடீர்கள் கவலை படாதீர்கள் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
English Summary
samantha speech about her ex lover